கோவை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை - சென்னை சென்ட்ரல் இடையே ஜுன் 3-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோவை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை - சென்னை சென்ட்ரல் இடையே ஜுன் 3-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் :- ரயில் எண் 06040 : கோவை - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜுன் 3-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அதே நாளில் இரவு 08.45 மணியளவில் சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியும், ஸ்லீப்பர் வசதியுடன் 6 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 9 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 18 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜுன் 1) காலை 08 மணி முதல் தொடங்குகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் :- ரயில் எண் 06040 : கோவை - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜுன் 3-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அதே நாளில் இரவு 08.45 மணியளவில் சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியும், ஸ்லீப்பர் வசதியுடன் 6 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 9 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 18 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜுன் 1) காலை 08 மணி முதல் தொடங்குகிறது.