கோவை: அரசு போட்டித் தேர்வுகளுக்கான (தொகுதி - II) பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
கோவை: அரசு போட்டித் தேர்வுகளுக்கான (தொகுதி - II) பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி II -ல் அடங்கிய பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பயிற்சியளிக்க உள்ளது.
வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி அன்று இலவச பயிற்சி பெற விரும்பும் மனுதாரர்கள் சுயவிவரக் குறிப்புடன் கடவுச் சீட்டு அளவு (பாஸ் போர்ட் சைஸ்) புகைப்படம் ஒன்றுடன் ஜூன் 12-க்குள் துடியலரில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு எழுத்து மூலமாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து பயிற்சிக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், பயிற்சி வகுப்புகள் (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் சனி மற்றும் ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வில் தேர்ச்சி அடைந்து அரசு வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி II -ல் அடங்கிய பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பயிற்சியளிக்க உள்ளது.
வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி அன்று இலவச பயிற்சி பெற விரும்பும் மனுதாரர்கள் சுயவிவரக் குறிப்புடன் கடவுச் சீட்டு அளவு (பாஸ் போர்ட் சைஸ்) புகைப்படம் ஒன்றுடன் ஜூன் 12-க்குள் துடியலரில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு எழுத்து மூலமாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து பயிற்சிக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், பயிற்சி வகுப்புகள் (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் சனி மற்றும் ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வில் தேர்ச்சி அடைந்து அரசு வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.