போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் : மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை: அரசு போட்டித் தேர்வுகளுக்கான (தொகுதி - II) பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

கோவை: அரசு போட்டித் தேர்வுகளுக்கான (தொகுதி - II) பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி II -ல் அடங்கிய பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பயிற்சியளிக்க உள்ளது. 

வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி அன்று இலவச பயிற்சி பெற விரும்பும் மனுதாரர்கள் சுயவிவரக் குறிப்புடன் கடவுச் சீட்டு அளவு (பாஸ் போர்ட் சைஸ்) புகைப்படம் ஒன்றுடன் ஜூன் 12-க்குள் துடியலரில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு எழுத்து மூலமாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து பயிற்சிக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

மேலும், பயிற்சி வகுப்புகள் (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் சனி மற்றும் ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வில் தேர்ச்சி அடைந்து அரசு வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...