தூத்துக்குடி சம்பவம் : 7 பேரின் உடல்களை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு

தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின்  உடல்களை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவர், ஒரு தடயவியல் நிபுணர் அல்லது எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவர் பரிசோதனை நடத்த வேண்டும். குண்டு பாய்ந்த, வெளியேறிய பகுதிகளை போட்டோ எடுக்க வேண்டும். உடலை முழுமையாக அனைத்து கோணங்களிலும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனை முடிந்த உடல்களை உறவினர்கள் கேட்டால்மட்டும் கொடுக்கலாம், என உத்தரவில் கூறியுள்ளது.

இதனிடையே, தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை நடத்த கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் தடயங்கள் அழிக்கப்படும் என சங்கரசுப்பு என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். சங்கர சுப்புவின் எதிர்ப்பை அடுத்து ஒரு வாரம் காலத்திற்கு ஆறு பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்த தடை விதித்து தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...