நிபா காய்ச்சலுக்கு பொள்ளாச்சி மருத்துவமனையில் தனி வார்டு

கோவை: நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி பகுதியில் இருந்து கேரள மாநிலமான பாலக்காடு செல்ல சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரத்தியேக வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் பத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் மருத்துவர் முருகேசன் கூறுகையில், "நிபா காய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தனி வார்டில் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



பொள்ளாச்சி கேரளத்தின் அருகே உள்ளதால் அங்கு சென்று வருபவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் போது தனி கவனம் செலுத்தி பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் இருந்து காய்ச்சலோடு வந்த நபருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் நி்பா தாக்குதலா? என்ற முறையில் பரிசோதனைகள் செய்தோம். ஆனால், அவருக்கு சாதாரண காய்ச்சலே இருந்ததால் அதற்கான சிகிச்சை அளித்தோம்." என்றார். 


Video Credit: Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...