கோவை: நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி: நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் இருந்து கேரள மாநிலமான பாலக்காடு செல்ல சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரத்தியேக வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் பத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் மருத்துவர் முருகேசன் கூறுகையில், "நிபா காய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தனி வார்டில் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கேரளத்தின் அருகே உள்ளதால் அங்கு சென்று வருபவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் போது தனி கவனம் செலுத்தி பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் இருந்து காய்ச்சலோடு வந்த நபருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் நி்பா தாக்குதலா? என்ற முறையில் பரிசோதனைகள் செய்தோம். ஆனால், அவருக்கு சாதாரண காய்ச்சலே இருந்ததால் அதற்கான சிகிச்சை அளித்தோம்." என்றார்.
Video Credit: Laxman