கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.
கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.
சுங்கம் சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை நோக்கிச் செல்லும் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள், விட்டு விட்டு டிஸ்கோ லைட் போல் எரிவதால் இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால், இப்பகுதிகளில் வாகன விபத்துகளும், குற்றச் சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
திருச்சி சாலை மட்டுமின்றி அவினாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் பராமரிப்பின்றி நிற்கின்றன.
ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளைப் பராமரிக்கும் பணிகளில் அந்தா நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை, மாநகராட்சி சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பொது மக்கள் புகார் அளிக்கின்றனர்.
பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், புதிதாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
சுங்கம் சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை நோக்கிச் செல்லும் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள், விட்டு விட்டு டிஸ்கோ லைட் போல் எரிவதால் இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால், இப்பகுதிகளில் வாகன விபத்துகளும், குற்றச் சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
திருச்சி சாலை மட்டுமின்றி அவினாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் பராமரிப்பின்றி நிற்கின்றன.
ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளைப் பராமரிக்கும் பணிகளில் அந்தா நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை, மாநகராட்சி சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பொது மக்கள் புகார் அளிக்கின்றனர்.
பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், புதிதாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.