திருச்சி சாலையில் விட்டு விட்டு எரியும் தெருவிளக்குகள் : வாகன ஓட்டிகள் அவதி

கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.

கோவை: மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகர் முழுவதும் சுமார் மூன்று லட்சம் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இருளில் தவித்துவருகின்றனர்.

சுங்கம் சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை நோக்கிச் செல்லும் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள், விட்டு விட்டு டிஸ்கோ லைட் போல் எரிவதால் இரவு நேரங்களில் இப்பகுதியை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால், இப்பகுதிகளில் வாகன விபத்துகளும், குற்றச் சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

திருச்சி சாலை மட்டுமின்றி அவினாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் தெருவிளக்குகள் பராமரிப்பின்றி நிற்கின்றன. 

ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளைப் பராமரிக்கும் பணிகளில் அந்தா நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை, மாநகராட்சி சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பொது மக்கள் புகார் அளிக்கின்றனர்.

பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், புதிதாக பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...