சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை: சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மேம்படுத்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி கோரும் சிறுபான்மையின பள்ளிகளுக்கு மதிப்பீட்டுத் தொகையில் ரூ.50 லட்சம் மிகாமல் மைய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது. 

இந்த திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் www.mhrd.gov.in/idmi என்ற இணையதள முகவரியில் உள்ளது. 

அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...