கோவை: சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மேம்படுத்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி கோரும் சிறுபான்மையின பள்ளிகளுக்கு மதிப்பீட்டுத் தொகையில் ரூ.50 லட்சம் மிகாமல் மைய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் www.mhrd.gov.in/idmi என்ற இணையதள முகவரியில் உள்ளது.
அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மேம்படுத்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி கோரும் சிறுபான்மையின பள்ளிகளுக்கு மதிப்பீட்டுத் தொகையில் ரூ.50 லட்சம் மிகாமல் மைய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் www.mhrd.gov.in/idmi என்ற இணையதள முகவரியில் உள்ளது.
அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.