சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம்

கோவை: கோவையில் 859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் 859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம் நடைபெற்றது. 



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 859 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு நன்கொடை ரூ. 1 லட்சம், ஆசிரியர் பணிக்கு ரூ. 3 லட்சம், பொறியியல் படிக்க ரூ. 50 லட்சம் என்ற பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், மருத்துவர், பட்டதாரி ஆடை அணிந்து மணி அடித்து நூதன முறையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அரசுப் பள்ளிகளை மூட கூடாது, தனியார் பள்ளியில் கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கத்தினர் பேசுகையில், "859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசு, 800 டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி தராமல் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது," இவ்வாறு அவர்கள் குற்றம்சாட்டினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...