கோவை: கோவையில் 859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் 859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி ஏலம் விடும் போராட்டம் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 859 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு நன்கொடை ரூ. 1 லட்சம், ஆசிரியர் பணிக்கு ரூ. 3 லட்சம், பொறியியல் படிக்க ரூ. 50 லட்சம் என்ற பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மருத்துவர், பட்டதாரி ஆடை அணிந்து மணி அடித்து நூதன முறையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அரசுப் பள்ளிகளை மூட கூடாது, தனியார் பள்ளியில் கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கத்தினர் பேசுகையில், "859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசு, 800 டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி தராமல் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது," இவ்வாறு அவர்கள் குற்றம்சாட்டினர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 859 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு நன்கொடை ரூ. 1 லட்சம், ஆசிரியர் பணிக்கு ரூ. 3 லட்சம், பொறியியல் படிக்க ரூ. 50 லட்சம் என்ற பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மருத்துவர், பட்டதாரி ஆடை அணிந்து மணி அடித்து நூதன முறையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அரசுப் பள்ளிகளை மூட கூடாது, தனியார் பள்ளியில் கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சமூக நீதிக்கான இளைஞர்கள் சங்கத்தினர் பேசுகையில், "859 அரசுப் பள்ளிகளை மூடும் தமிழக அரசு, 800 டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி தராமல் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்படுகிறது," இவ்வாறு அவர்கள் குற்றம்சாட்டினர்.