நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
இந்தப் பயிற்சி பட்டறையில் காவல் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சி பட்டறையில் குழந்தைகள் சார்ந்த சட்டங்களான, இளைஞர் நீதி சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள முக்கிய சாரம்சங்கள் பற்றி பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ரூபா கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பயிற்சி பட்டறையைத் தொடர்ந்து, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளின் நலன் குறித்தும், அனைத்து தேயிலை தோட்டங்களில் பிங்க் கழிவறைகள் அமைப்பது பற்றியும் நாளை ஆய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
இந்தப் பயிற்சி பட்டறையில் காவல் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சி பட்டறையில் குழந்தைகள் சார்ந்த சட்டங்களான, இளைஞர் நீதி சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள முக்கிய சாரம்சங்கள் பற்றி பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ரூபா கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பயிற்சி பட்டறையைத் தொடர்ந்து, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளின் நலன் குறித்தும், அனைத்து தேயிலை தோட்டங்களில் பிங்க் கழிவறைகள் அமைப்பது பற்றியும் நாளை ஆய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.