குழந்தை பாதுகாப்புச் சட்டம் மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 

இந்தப் பயிற்சி பட்டறையில் காவல் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கறிஞர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பின் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



இந்தப் பயிற்சி பட்டறையில் குழந்தைகள் சார்ந்த சட்டங்களான, இளைஞர் நீதி சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள முக்கிய சாரம்சங்கள் பற்றி பயிற்சியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ரூபா கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பயிற்சி பட்டறையைத் தொடர்ந்து, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளின் நலன் குறித்தும், அனைத்து தேயிலை தோட்டங்களில் பிங்க் கழிவறைகள் அமைப்பது பற்றியும் நாளை ஆய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...