இன்று வெளியாகிய சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.
இன்று வெளியாகிய சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் 16,38,428 மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 மணி நேரத்திற்கு முன்பாகவே முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில், அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த பிரகார் மிட்டல், உத்தரபிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த ரிம்ஜிம் அகர்வால், ஷாம்லி பகுதியைச் சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜி.ஸ்ரீலட்சுமி ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளனர்.
தேர்வர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ., என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் 16,38,428 மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 மணி நேரத்திற்கு முன்பாகவே முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில், அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த பிரகார் மிட்டல், உத்தரபிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த ரிம்ஜிம் அகர்வால், ஷாம்லி பகுதியைச் சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜி.ஸ்ரீலட்சுமி ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளனர்.
தேர்வர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.