சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : கேரள மாணவி உள்பட 4 பேர் முதலிடம்

இன்று வெளியாகிய சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

இன்று வெளியாகிய சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வு முடிவில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர். 

சி.பி.எஸ்.இ., என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் 16,38,428 மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 மணி நேரத்திற்கு முன்பாகவே முடிவுகள் வெளியாகியுள்ளன. 

அதில், அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த பிரகார் மிட்டல், உத்தரபிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த ரிம்ஜிம் அகர்வால், ஷாம்லி பகுதியைச் சேர்ந்த நந்தினி கார்க் மற்றும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜி.ஸ்ரீலட்சுமி ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளனர். 

தேர்வர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...