ஹேர்ஸ்டைலை மாற்றிவிட்டதால் விரக்தி : 8-ம் வகுப்பு மாணவன் தூக்குபோட்டு தற்கொலை

திருப்பூர்: திருப்பூரில் ஸ்டைலாக வெட்டிய முடியை, தந்தை மாற்றி வெட்டி விட்டதால் விரக்தியடைந்த 15 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் ஸ்டைலாக வெட்டிய முடியை, தந்தை மாற்றி வெட்டி விட்டதால் விரக்தியடைந்த 15 வயது சிறுவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் 2-வது வீதியை சேர்ந்த தையல் தொழிலாளி சுரேஷ், விஜயலட்சுமி தம்பதியினரின் இளைய மகன் நவீன்குமார் (15). இவர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு, விடுமுறையில் வீட்டில் பொழுதைக் கழித்து வந்தார். அடுத்த வாரம் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்க உள்ளதால், நவீன்குமாரை அவருடைய தந்தை அருகில் உள்ள சலூனுக்கு சென்று முடிவெட்டி வருமாறு கூறி அனுப்பி உள்ளார். கடைக்கு சென்ற நவீன்குமார், தனக்கு பிடித்ததைப் போல ஸ்டைலாக முடி வெட்டி விட்டு வீடு திரும்பியுள்ளார். 

இதைக் கண்ட சிறுவனின் தந்தை சுரேஷ், முடி ஸ்டைலாக இருந்ததால் கடுமையாக கோபமடைந்துள்ளார். இதையடுத்து, அவர் உடனடியாக நவீன்குமாரை அதே கடைக்கு அழைத்து சென்று முடியை ஒட்ட வெட்டிவிட்டுள்ளார். இதனால், சிறுவன் மனவிரக்தியடைந்துள்ளான். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த நவீன், தனக்கு விருப்பமானபடி ஹேர்ஸ்டைல் வைக்க முடியவில்லை என்ற வேதனையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் நவீன்குமாரை மீட்டு, குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார். 

இதுகுறித்து தகவலறிந்த வேலம்பாளையம் போலீசார் நவீன்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருடத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் ஸ்டைலாக வெட்டிய முடியை தந்தை மாற்றி வெட்டி விட்டதால், 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...