கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு சென்ற தி.மு.க.

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்து இன்று சட்டசபைக்கு சென்றனர்.


சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்து இன்று சட்டசபைக்கு சென்றனர்.

துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காகத் தமிழக சட்டசபை இன்று கூடியது. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விவாதிக்க தி.மு.க.,வினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழலில், இன்று பேரவைக்கு வந்த தி.மு.க.,வினர் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், குட்கா விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்ப தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சபாநாயகர் பேச அனுமதிக்காவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு மற்றும் சட்டசபை வெளியே போராட்டம் போன்றவற்றை நடத்த ஆயத்தமாக உள்ளதாகத் தெரிகிறது. 

இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...