சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்து இன்று சட்டசபைக்கு சென்றனர்.
சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்து இன்று சட்டசபைக்கு சென்றனர்.
துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காகத் தமிழக சட்டசபை இன்று கூடியது. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விவாதிக்க தி.மு.க.,வினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழலில், இன்று பேரவைக்கு வந்த தி.மு.க.,வினர் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், குட்கா விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்ப தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சபாநாயகர் பேச அனுமதிக்காவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு மற்றும் சட்டசபை வெளியே போராட்டம் போன்றவற்றை நடத்த ஆயத்தமாக உள்ளதாகத் தெரிகிறது.
இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.