கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காந்திபுரம் 100 அடி சாலையில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலக் கட்டுமான பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பாலம் கட்டுமான பணிக்கு வேலைக்கு வடமாநில தொழிலாளியான ராஜேந்திர சிங் என்பவர் சென்றார். பாலத்தின் மேல் பகுதியில் பணிக்கு சென்றவர், அங்கிருந்த கம்பியில் துணி மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்கள், இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், வட மாநில தொழிலாளர்கள் உதவியுடன் ராஜேந்திரசிங்கின் பிரேதத்தை கீழே இறக்கினர். தொடர்ந்து, உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், வடமாநில தொழிலாளி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Video credit: Laxman

காந்திபுரம் 100 அடி சாலையில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலக் கட்டுமான பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பாலம் கட்டுமான பணிக்கு வேலைக்கு வடமாநில தொழிலாளியான ராஜேந்திர சிங் என்பவர் சென்றார். பாலத்தின் மேல் பகுதியில் பணிக்கு சென்றவர், அங்கிருந்த கம்பியில் துணி மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்கள், இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், வட மாநில தொழிலாளர்கள் உதவியுடன் ராஜேந்திரசிங்கின் பிரேதத்தை கீழே இறக்கினர். தொடர்ந்து, உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், வடமாநில தொழிலாளி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Video credit: Laxman