கோவை புதிய மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



காந்திபுரம் 100 அடி சாலையில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலக் கட்டுமான பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பாலம் கட்டுமான பணிக்கு வேலைக்கு வடமாநில தொழிலாளியான ராஜேந்திர சிங் என்பவர் சென்றார். பாலத்தின் மேல் பகுதியில் பணிக்கு சென்றவர், அங்கிருந்த கம்பியில் துணி மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.



இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்கள், இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், வட மாநில தொழிலாளர்கள் உதவியுடன் ராஜேந்திரசிங்கின் பிரேதத்தை கீழே இறக்கினர். தொடர்ந்து, உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், வடமாநில தொழிலாளி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Video credit: Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...