கோவை: கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 60 சவரன் நகை மற்றும் ரூ. ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை: கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 60 சவரன் நகை மற்றும் ரூ. ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்த கவையகாளியம்மன் வீதியை சேர்ந்தவர் ரூபன். இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் சினிமாவிற்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. ஒரு லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து அவர் கோவில்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு பதிவான கை ரேகையை கொண்டு, பழைய கொள்ளையர்கள் யாராவது இச்செயலில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்த கவையகாளியம்மன் வீதியை சேர்ந்தவர் ரூபன். இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் சினிமாவிற்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. ஒரு லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து அவர் கோவில்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு பதிவான கை ரேகையை கொண்டு, பழைய கொள்ளையர்கள் யாராவது இச்செயலில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.