கோவையில் தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை

கோவை: கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 60 சவரன் நகை மற்றும் ரூ. ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை: கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 60 சவரன் நகை மற்றும் ரூ. ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்த கவையகாளியம்மன் வீதியை சேர்ந்தவர் ரூபன். இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் சினிமாவிற்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 60 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. ஒரு லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. 

இது குறித்து அவர் கோவில்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு பதிவான கை ரேகையை கொண்டு, பழைய கொள்ளையர்கள் யாராவது இச்செயலில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...