எல்லைகளில் நிபா வைரஸ் குறித்து சிறப்பு முகாம் அமைத்து கண்காணிக்க கோரிக்கை

கோவை: தமிழகம் - கேரளா மாநில எல்லைகளில் நிபா வைரஸ் குறித்து சிறப்பு முகாம் அமைத்து கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: தமிழகம் - கேரளா மாநில எல்லைகளில் நிபா வைரஸ் குறித்து சிறப்பு முகாம் அமைத்து கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில், "மாநில எல்லையில் மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோய்கள் கண்டறிய தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நிபா வைரஸ் பற்றி கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனங்கள் அழிக்கப்படுவதால் அங்குள்ள விலங்குகள் இடப்பெயர்ச்சியில் ஈடுபடுகின்றன. இதனால், நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதனால், வனங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். மருத்துவ குணம் உள்ள மூலிகைச் செடிகளை கொண்டு சித்த மருத்துவம் மூலம் நிபா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும்," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...