கோவை: தமிழகம் - கேரளா மாநில எல்லைகளில் நிபா வைரஸ் குறித்து சிறப்பு முகாம் அமைத்து கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழகம் - கேரளா மாநில எல்லைகளில் நிபா வைரஸ் குறித்து சிறப்பு முகாம் அமைத்து கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில், "மாநில எல்லையில் மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோய்கள் கண்டறிய தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
நிபா வைரஸ் பற்றி கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனங்கள் அழிக்கப்படுவதால் அங்குள்ள விலங்குகள் இடப்பெயர்ச்சியில் ஈடுபடுகின்றன. இதனால், நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதனால், வனங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். மருத்துவ குணம் உள்ள மூலிகைச் செடிகளை கொண்டு சித்த மருத்துவம் மூலம் நிபா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும்," என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில், "மாநில எல்லையில் மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோய்கள் கண்டறிய தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
நிபா வைரஸ் பற்றி கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனங்கள் அழிக்கப்படுவதால் அங்குள்ள விலங்குகள் இடப்பெயர்ச்சியில் ஈடுபடுகின்றன. இதனால், நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதனால், வனங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். மருத்துவ குணம் உள்ள மூலிகைச் செடிகளை கொண்டு சித்த மருத்துவம் மூலம் நிபா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும்," என்றார்.