கோவை: உலக பசி தினத்தை முன்னிட்டு உணவை வீணாக்காமல் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் நேற்று நடத்தப்பட்டது.
கோவை: உலக பசி தினத்தை முன்னிட்டு உணவை வீணாக்காமல் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் நேற்று நடத்தப்பட்டது.
அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார், முன்னாள் லெப்டினன்ட் ஈசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், ஓவியப் போட்டி, புகைப்பட போட்டி, பேச்சு மற்றும் கதை சொல்லும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக உணவு வங்கியின் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், "பசி என்பது கொண்டாட்டம் அல்ல. அதனால் தான், சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பசி என்ற சொல்லுக்கு முடிவுகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்." என்றார்.

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உணவு வங்கியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார், முன்னாள் லெப்டினன்ட் ஈசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், ஓவியப் போட்டி, புகைப்பட போட்டி, பேச்சு மற்றும் கதை சொல்லும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக உணவு வங்கியின் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், "பசி என்பது கொண்டாட்டம் அல்ல. அதனால் தான், சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பசி என்ற சொல்லுக்கு முடிவுகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்." என்றார்.

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உணவு வங்கியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
