சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில் படித்து பிளஸ்-2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில் படித்து பிளஸ்-2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சி.பி.எஸ்.இ பாடப்பிரிவில் சுமார் 28 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியுள்ளனர். இதில் 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் மட்டும், 12 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 4,138 மையங்களில் இந்தத் தேர்வுகள் நடந்து முடிந்தன. வினாத்தாள் வெளியானதால், பொருளாதாரவியல் தேர்வு மீண்டும் நடந்தது.

இதையடுத்து சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.results.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 83.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.31 சதவீத மாணவிகளும், 78.99 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்ஸவா என்பவர் 499 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

முதல் 3 இடங்களைப் பிடித்த மண்டலங்கள்:- 

திருவனந்தபுரம் மண்டலம் - 97.32%

சென்னை மண்டலம் - 93.87%

டெல்லி மண்டலம் - 89%

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....