கத்திமுனையில் காரை கடத்திச் சென்ற கொள்ளையனுக்கு வலைவீச்சு

கோவை: கோவை கொடிசியா மைதானம் அருகே நின்று கொண்டிருந்த காரை கத்திமுனையில் கடத்திச் சென்ற கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கோவை கொடிசியா மைதானம் அருகே நின்று கொண்டிருந்த காரை கத்திமுனையில் கடத்திச் சென்ற கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காளப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகன் ஜெயப்பிரகாஷ். இவர், கொடிசியா பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு உள்ளே அமர்ந்து இருந்தார். அப்போது, ஜெயப்பிரகாசை நோட்டமிட்டு வந்த மர்மநபர், கத்திமுனையில் அவரிடமிருந்து மாருதி சிப்ட் கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ. 1,500 ரொக்கத்தையும் அபகரித்துச் சென்றுள்ளான்.

கோவை அவிநாசி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. அதே போல காலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் இந்த பிரதான சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டப்பகலில் கத்திமுனையில் நடைபெற்றுள்ள இந்த துணிகர சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். அதேபோல, அவினாசி சாலையில் சிக்னல்களில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...