கோவை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவையில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவையில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னிச்சையாக வெகுண்டு எழுந்து போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் காந்திபுரம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள், தற்போது, தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக போராட வேண்டும். திருநங்கைகள் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து தொடர்ந்து போராடுவோம் எனக் கோசங்களை எழுப்பினர். இதனிடையே, அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து, திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னிச்சையாக வெகுண்டு எழுந்து போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் காந்திபுரம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள், தற்போது, தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக போராட வேண்டும். திருநங்கைகள் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து தொடர்ந்து போராடுவோம் எனக் கோசங்களை எழுப்பினர். இதனிடையே, அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து, திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
