ஸ்டெர்லைட் ஆலை கலவரம்: கோவையில் திருநங்கைகள் போராட்டம்

கோவை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவையில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைக் கண்டித்து கோவையில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னிச்சையாக வெகுண்டு எழுந்து போராடிய தூத்துக்குடி மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் காந்திபுரம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள், தற்போது, தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக போராட வேண்டும். திருநங்கைகள் ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்து தொடர்ந்து போராடுவோம் எனக் கோசங்களை எழுப்பினர். இதனிடையே, அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து, திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...