திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில், பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில், பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததால் பக்தர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மதம் பிடித்த திருச்சி சமயபுரம் கோவில் யானை மிதித்ததில் யானை பாகன் கஜேந்திரன் (44) என்பவர் உயிரிழந்தார். மதம் பிடித்த யானை தாக்கியதாலும், அலறியடித்து பக்தர்கள் ஓடியதாலும் 8 பேர் காயமடைந்தனர். மேலும், அந்தப் பெண் யானை மசினி தூக்கி வீசியதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யானைக்கு மதம்பிடித்ததால் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடை தற்காலிகமாக சாத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதம்பிடித்த யானைக் கட்டுப்படுத்தப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.