தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம்: விவசாயிகள், வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு

கோவை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.



கோவை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து வழக்கறிஞர்கள் 2-வது நாளாக நீதிமன்றத்தையும், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தையும் புறக்கணித்தனர். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கருப்பு துண்டு அணிந்து வந்து தங்களது கண்டத்தைப் பதிவு செய்தனர். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர். 



இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், "நீர்வளம், நிலவளம் காக்கப்பட வேண்டும். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை எதிர்த்து போராடிய மக்களுக்குப் பரிசு மழையாக குண்டு மழை பொழிந்துள்ளனர். தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக என்றுமே கோவை மாவட்ட விவசாயிகள் இருப்பார்கள். தொடர்ந்து, தூத்துக்குடி மக்களுக்காகப் போராடுவோம். மத்திய அரசு இந்த விவகாரத்தில் வாய்மூடி மவுனமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழிற்சாலையை மத்திய அரசு உடனடியாக மூட வேண்டும்," என்றார்.

இதேபோல, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் காரணமாக நீதிமன்ற அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் அறவழியில் போராடியவர்களை திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...