தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம்: கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். 



தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். மேலும், அங்கு போலீசார் 3-வது நாளாக குவிக்கப்பட்டனர். இதனால், தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பொதுமக்களை சுட்டுக் கொன்ற போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் போராட்டங்களும், மறியல்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளான கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மாணவர்கள் சிலர் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மக்களின் நலனைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், போலீசாரால் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கோசங்களை எழுப்பினர். பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். போராட்டங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வ.உ.சி., மைதானத்தில் ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...