கோவை: கோவை மாவட்ட சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் பள்ளிக் கூடங்களை அதற்கான இணையதளத்தில் இணைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்ட சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் பள்ளிக் கூடங்களை அதற்கான இணையதளத்தில் இணைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிருத்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தேசிய உதவித் தொகை வழங்கப்படும். www.scholarships.gov.in வாயிலாக மத்திய அரசின் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். எனவே, 2018-2019-ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்விநிலையங்களும் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீட்டை (User ID) பெற வேண்டும்.
மேலும், ஏ.ஐ.எஸ்.எச்.ஈ., எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால் அதுபற்றி உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. AISHE எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் www.aishe.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம். பள்ளிகளைப் பொருத்தவரை UDISE எண்ணிற்கு முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிருத்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தேசிய உதவித் தொகை வழங்கப்படும். www.scholarships.gov.in வாயிலாக மத்திய அரசின் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தக் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். எனவே, 2018-2019-ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்விநிலையங்களும் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீட்டை (User ID) பெற வேண்டும்.
மேலும், ஏ.ஐ.எஸ்.எச்.ஈ., எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால் அதுபற்றி உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. AISHE எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் www.aishe.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம். பள்ளிகளைப் பொருத்தவரை UDISE எண்ணிற்கு முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.