தி.மு.க., தலைமையில் தமிழகத்தில் நாளை முழு அடைப்பு

கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.

கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன.

நாளை நடைபெறும் பந்த் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படாது என்றும், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...