கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.
கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன.
நாளை நடைபெறும் பந்த் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படாது என்றும், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுகின்றன.
நாளை நடைபெறும் பந்த் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படாது என்றும், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.