ராணுவ பணித்தேர்வு: முன்னாள் வீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி வகுப்பு

ராணுவப் பணித்தேர்வுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள முன்னாள் வீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவப் பணித்தேர்வுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள முன்னாள் வீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் வழங்கப்படும் பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளின்படி படைப்பணியில் அலுவலராக நியமனம் பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தினரால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவ பணித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் கலந்து கொள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு இணையதளம் மூலம் 6 மாத கால பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான, இணையதள முகவரி www.exweletutor.com ஆகும்.

எனவே, இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்கள் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி உரிய சான்று பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு தொழிற்கல்வி, மருத்துவப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கு கல்லூரியில் சேருவதற்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...