நீலகிரி வந்த ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நீலகிரிக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நீலகிரிக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.

சென்னையிலிருந்து கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கார் மூலம் உதகை சென்றார். அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் வரவேற்றனர். உதகை தாவரவியல் பூங்கா அருகே இருக்கும் ராஜ்பவனில் தங்கும் அவர், நாளை மாலை 3.45 மணிக்கு நடக்கும் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, மலர் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

ஜூன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கும் ஆளுநர், பல்வேறு சுற்றுலா தளங்களைப் பார்வையிட்ட பிறகு, மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்கிறார். ஆளுநரின் இந்த வருகையையொட்டி, நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...