கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைஅகற்றும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மேற்கொண்டனர்.
கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைஅகற்றும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மேற்கொண்டனர்.

கோவையில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி 67-வது வார களப்பணி நேற்று நடைபெற்றது. இந்த களப்பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வாலாங்குளத்தில் இருந்த 2 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபான பாட்டிகளை அகற்றினர்.

மேலும், அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குளக்கரையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாகவும், சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இளநீர் கடையினரால் தூக்கியெறியப்படும் 'ஸ்ட்ரா'க்களும் குளத்திற்கு சவாலாக உள்ளதாகவும் அந்த அமைப்பினர் குற்றம் சாட்டினர்.


கோவையில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி 67-வது வார களப்பணி நேற்று நடைபெற்றது. இந்த களப்பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வாலாங்குளத்தில் இருந்த 2 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபான பாட்டிகளை அகற்றினர்.

மேலும், அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குளக்கரையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாகவும், சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இளநீர் கடையினரால் தூக்கியெறியப்படும் 'ஸ்ட்ரா'க்களும் குளத்திற்கு சவாலாக உள்ளதாகவும் அந்த அமைப்பினர் குற்றம் சாட்டினர்.
