வெள்ளியங்கிரி தூய்மைப் பணியில் தென் கைலாய பக்தி இயக்கம்

கோவை: தென் கைலாய பக்தி இயக்கம் சார்பில் இன்று நடைபெற்ற வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியில் 315 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

கோவை: தென் கைலாய பக்தி இயக்கம் சார்பில் இன்று நடைபெற்ற வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியில் 315 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இந்த சுத்திகரிப்பு பணியில் கோவை, சென்னை, கும்பகோணம், வேளூர், திருச்சி, பொள்ளாச்சி, சிதம்பரம், சிவகாசி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து தன்னார்வத் தொண்டர்கள் வெள்ளியங்கிரி மலைப்பாதை மற்றும் முதல் ஐந்து மலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டனர்.



வெள்ளியங்கிரியின் இயற்கை, அழகு மற்றும் புனிதத்தை காத்திடும் பொருட்டு, தென் கைலாய பக்தி இயக்கம், வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியை, தங்கள் செயல் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மே 27 ஆம் தேதியன்றும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். மேலும், விவரங்களுக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலராக இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் - 8300083111.

தென்கைலாய பக்தி இயக்கம் என்பது வெள்ளிங்கிரி பக்தர்களால் தென்கைலாய பக்தி பேரவை எனும் இலாப நோக்கம் இல்லாத அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஆன்மீக இயக்கமாகும். இந்த இயக்கம் வெள்ளியங்கிரி பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் இம்மலையின் புனிதத்தை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...