கோவை: சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை, முதன்முறையாக கோவையில் தனது கிளையை நிறுவியுள்ளது.
கோவை: சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை, முதன்முறையாக கோவையில் தனது கிளையை நிறுவியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் தனது கிளையை ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை நிறுவியது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியான அரசூரையடுத்த உதுபாளையம் அருகே குளத்தோட்டத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள விற்பனையகம் மற்றும் தொழிற்சாலையை திறந்துள்ளது. இந்த திறப்பு விழாவில் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை இந்திய அளவிலான மேலாளர் சங்கீதா மற்றும் அதன் ஆசிய அளவிலான மேலாளர் டைசி வூ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலையைச் சேர்ந்த லாய் ஜோங்கியோ பேசுகையில், "பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், எங்களின் மிஷன் தயாரிப்பில் அதிக அளவு அனுபவத்தைக் கொண்டுள்ளோம். எங்களது நிறுவனம் உள்ளூர் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மெஷின்களை தயார் செய்து வருகிறோம். குறிப்பாக, மெருகூட்டும் இயந்திரம் சிறந்த தரத்தைப் பெற்றது. எங்களுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்," எனக் கூறினார்.
கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் தனது கிளையை ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை நிறுவியது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியான அரசூரையடுத்த உதுபாளையம் அருகே குளத்தோட்டத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள விற்பனையகம் மற்றும் தொழிற்சாலையை திறந்துள்ளது. இந்த திறப்பு விழாவில் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை இந்திய அளவிலான மேலாளர் சங்கீதா மற்றும் அதன் ஆசிய அளவிலான மேலாளர் டைசி வூ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலையைச் சேர்ந்த லாய் ஜோங்கியோ பேசுகையில், "பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், எங்களின் மிஷன் தயாரிப்பில் அதிக அளவு அனுபவத்தைக் கொண்டுள்ளோம். எங்களது நிறுவனம் உள்ளூர் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மெஷின்களை தயார் செய்து வருகிறோம். குறிப்பாக, மெருகூட்டும் இயந்திரம் சிறந்த தரத்தைப் பெற்றது. எங்களுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்," எனக் கூறினார்.