கோவையில் முதன்முறையாக தொழிற்சாலையைத் திறந்த பிரபல சீன நிறுவனம்

கோவை: சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை, முதன்முறையாக கோவையில் தனது கிளையை நிறுவியுள்ளது.

கோவை: சீனாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை, முதன்முறையாக கோவையில் தனது கிளையை நிறுவியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் தனது கிளையை ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை நிறுவியது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியான அரசூரையடுத்த உதுபாளையம் அருகே குளத்தோட்டத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள விற்பனையகம் மற்றும் தொழிற்சாலையை திறந்துள்ளது. இந்த திறப்பு விழாவில் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலை இந்திய அளவிலான மேலாளர் சங்கீதா மற்றும் அதன் ஆசிய அளவிலான மேலாளர் டைசி வூ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஹெங்சாங் மிஷினரி தொழிற்சாலையைச் சேர்ந்த லாய் ஜோங்கியோ பேசுகையில், "பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், எங்களின் மிஷன் தயாரிப்பில் அதிக அளவு அனுபவத்தைக் கொண்டுள்ளோம். எங்களது நிறுவனம் உள்ளூர் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மெஷின்களை தயார் செய்து வருகிறோம். குறிப்பாக, மெருகூட்டும் இயந்திரம் சிறந்த தரத்தைப் பெற்றது. எங்களுக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்," எனக் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...