நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.
நீலகிரி : கோடை விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி உதகையில் இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அம்பேத்கர், காமராஜர், பெரியார், அப்துல் கலாம், ஹிட்லர் போன்ற தலைவர்களின் சுய சரிதை கொண்ட வரலாறு புத்தகங்கள், மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெறும் புத்தகக் கண்காட்சியில், நீலகிரி குறித்த புத்தகங்கள் இடம் பெறும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.