நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த 122-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

வகைகள்
இந்த மலர் கண்காட்சியில் இன்கா மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, ஆசியாடிக் லில்லி பம், பிளாக்ஸ், சால்வியா, பால்ஸம், உள்பட 18 மலர் வகைகள், 50 ஆயிரத்திற்கு மேலான பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் ஜீவ நாடியாகத் திகழும் பழமை வாய்ந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் சிவப்பு வெள்ளை கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி, பூங்காவிற்கு வரும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

பூங்காவிற்கு வரும் சிறுவர்களை ஈர்க்கின்ற வகையில் பார்பி டால் என்றிழைக்கப்படும் பொம்மை 1500 ஆர்கிட் மற்றும் 1000 கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் 'செல்பி' எடுத்துக்கொள்ள ஏதுவாக 'செல்பி-ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது மலர் கண்காட்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த 122-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

வகைகள்
இந்த மலர் கண்காட்சியில் இன்கா மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, ஆசியாடிக் லில்லி பம், பிளாக்ஸ், சால்வியா, பால்ஸம், உள்பட 18 மலர் வகைகள், 50 ஆயிரத்திற்கு மேலான பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் ஜீவ நாடியாகத் திகழும் பழமை வாய்ந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் சிவப்பு வெள்ளை கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி, பூங்காவிற்கு வரும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

பூங்காவிற்கு வரும் சிறுவர்களை ஈர்க்கின்ற வகையில் பார்பி டால் என்றிழைக்கப்படும் பொம்மை 1500 ஆர்கிட் மற்றும் 1000 கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் 'செல்பி' எடுத்துக்கொள்ள ஏதுவாக 'செல்பி-ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது மலர் கண்காட்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
