உதகையில் தொடங்கியது மலர் கண்காட்சி : பூத்துக் குலுங்கும் மலர்களை கான பொதுமக்கள் ஆர்வம்..!

நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் 122-வது வருடாந்திர மலர் காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.



ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த 122-வது மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 



வகைகள் 

இந்த மலர் கண்காட்சியில் இன்கா மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, ஆசியாடிக் லில்லி பம், பிளாக்ஸ், சால்வியா, பால்ஸம், உள்பட 18 மலர் வகைகள், 50 ஆயிரத்திற்கு மேலான பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் ஜீவ நாடியாகத் திகழும் பழமை வாய்ந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் சிவப்பு வெள்ளை கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மேட்டூர் நீர்த்தேக்க மாதிரி, பூங்காவிற்கு வரும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. 



பூங்காவிற்கு வரும் சிறுவர்களை ஈர்க்கின்ற வகையில் பார்பி டால் என்றிழைக்கப்படும் பொம்மை 1500 ஆர்கிட் மற்றும் 1000 கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 



மேலும், கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் 'செல்பி' எடுத்துக்கொள்ள ஏதுவாக 'செல்பி-ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது மலர் கண்காட்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...