கோவையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களின் கார்கள் உடைப்பு : அமைச்சரின் ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு

கோவை : கோவையில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களின் கார் கண்ணாடிகளை உடைத்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை : கோவையில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களின் கார் கண்ணாடிகளை உடைத்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



வடவள்ளி பகுதியில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்ற அவர்களின் கார்கள் மீது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளரான சந்திரசேகரின் ஆட்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. 

பல்வேறு கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், "கூட்டம் முடிந்து எங்களது கார்களில் திரும்பிக் கொண்டிருந்தோம். முதலில், எங்கள் மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துறையின் கார் தாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சுமார் 15 கார்களை கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். 



இதில், இரண்டு பெண்கள் உள்பட எட்டு பேர் காயமடைந்தனர். தாக்கியவர்களை விட்டுவிட்டு, எங்களை கைது செய்துவிடுவோம் என போலீசார் மிரட்டுகின்றனர். எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்" என்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட தினகரனின் ஆதரவாளர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, தொண்டாமுத்தூர் ராஜலட்சுமி மண்டபத்தில் அடைத்தனர்.

Video: Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...