கோவை: கோவை மாநகராட்சி 21-வது வார்டில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு இடம் வழங்கக்கோரி குமாரசாமி நகர் பொதுமக்கள் காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாநகராட்சி 21-வது வார்டில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு இடம் வழங்கக்கோரி குமாரசாமி நகர் பொதுமக்கள் காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் இருக்கும் குமாரசாமி நகர் மற்றும் முத்தனன் குளம் அருகே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த மக்களை குமாரசாமி நகரில் இருந்து வேறு இடத்திற்கு அகற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வேண்டாம். வீடு கட்ட இடமாக அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி காந்திபார்க் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன் என்பவர் கூறியதாவது:- மாநகராட்சி நிறையத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்த இடத்தை கூட, பொதுமக்களுக்கு கொடுக்கவில்லை. மேலும், சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இருந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடனே வீட்டுமனைப் பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும், எனக் கூறினார்.


கோவை மாநகராட்சி 21-வது வார்டில் இருக்கும் குமாரசாமி நகர் மற்றும் முத்தனன் குளம் அருகே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த மக்களை குமாரசாமி நகரில் இருந்து வேறு இடத்திற்கு அகற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வேண்டாம். வீடு கட்ட இடமாக அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி காந்திபார்க் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற வேல்முருகன் என்பவர் கூறியதாவது:- மாநகராட்சி நிறையத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்த இடத்தை கூட, பொதுமக்களுக்கு கொடுக்கவில்லை. மேலும், சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இருந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடனே வீட்டுமனைப் பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும், எனக் கூறினார்.
