கோவை: தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர் தம் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் 'தமிழ்ச் செம்மல்' என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை: தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர் தம் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் 'தமிழ்ச் செம்மல்' என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதுவரை 96 பேர் இந்த விருதினை பெற்றுள்ளனர். நடப்பாண்டிற்கான 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் (32 பேருக்கு) வழங்கப்படும். அவ்வறிப்பிற்கிணங்க 2019–ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ் அமைப்பு வைத்து அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு அவற்றுடன் நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் வரும் ஜூன் மாதம் 16–ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதுவரை 96 பேர் இந்த விருதினை பெற்றுள்ளனர். நடப்பாண்டிற்கான 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் (32 பேருக்கு) வழங்கப்படும். அவ்வறிப்பிற்கிணங்க 2019–ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ் அமைப்பு வைத்து அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு அவற்றுடன் நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் வரும் ஜூன் மாதம் 16–ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.