பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கோவையில் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி

கோவை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து கோவையில் பள்ளி மாணவிகள் இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து கோவையில் பள்ளி மாணவிகள் இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ஜெயலட்சுமி . இவரது மகள் 12 வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில் இன்று முடிவுகள் வெளியானது. தேர்வில் அவர் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தார். மகள் தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்த அவரது தாய் உடனடியாக அவரை மீட்டார். மாணவிக்கு கை முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



இதே போல சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் பாபுவின் மகள் தனியார் பயிற்சி மையத்தின் மூலம் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். இன்றைக்கு வெளியான தேர்வு முடிவில் தோல்வியடைந்ததை அடுத்து வீட்டில் இருந்து பெனாயிலை குடித்தார். இதையறிந்த அவரது அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.



பிளஸ் 2 முடிவுகளால் இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...