திருப்பூரில் பாதி எரிந்த நிலையில் ஆணின் கால் கண்டெடுப்பு : கொலையா...? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் சாலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆணின் கால் பகுதி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் சாலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆணின் கால் பகுதி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வளம் பாலம் கே.பி.என்., காலனி மின்மயானம் அருகே நொய்யல் ஆற்றையொட்டி சென்ற தெருநாய் ஒன்று, மனித கால் ஒன்றை வாயில் கவ்வியபடி ஓடியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த சம்பவத்தை கண்டு மிரண்டனர். திடீரென சாலை ஓரத்தில் காலை போட்டு விட்டு நாய் ஓடி விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, துணி சுற்றிய நிலையில் கிடந்த கால் பகுதி, ஆணுடையது என்பது முதல்கட்டமாக தெரிய வந்தது.

இடது கால்பகுதி பாதி எரிந்த நிலையில், மீதி ஒரு பாகம் கொஞ்சம் தள்ளி கிடந்தது. காலில் கத்தரிக்கோல், மருத்துவமனையில் காயத்துக்கு கட்டப்படும் துணி சுற்றியிருந்தது. இதனால், ஏதாவது, மருத்துவமனை ஒன்றில் சர்க்கரை போன்ற நோயால் அகற்றப்பட்ட கால் தூக்கி வீசப்பட்டதா..? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனா்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...