கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யனை, தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வனப்பகுதிக்கு சென்ற நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யனை, தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வனப்பகுதிக்கு சென்ற நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
நரசிபுரம் வனப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டி வழக்கம். அதன்படி தோட்டங்களில் சட்டவிரோதமாக விவசாயிகள் நாட்டுவெடிகுண்டுகள் வைத்துள்ளனர். எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சுமார் 55 வயதுடைய காட்டு யானை, நாட்டு வெடிகுண்டை கடித்ததில், அதன் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நாட்களாக காயத்துடன் சுற்றித்திருந்த அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நரசிபுரம் அருகே சுந்தராவயல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை நேற்று முன்தினம் மாலை மயங்கி விழுந்தது.
இதைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சத்துப் பொருட்களான குளுகோஸ், பசுந் தீவனங்கள் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கி நிறுத்த முயற்சி செய்யப்பட்டது.
இதனால், உடல்நலம் தேறிய காட்டு யானை, மெதுவாகக் கால்களை தரையில் ஊன்றி வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றது. மேலும், நோய்வாய்பட்ட யானையை தொடர்ந்து, வனத்துறையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், நரசிபுரம் அருகே வனப்பகுதியில் இந்த யானை பரிதாபமாக இன்று உயிரிழந்தது. இது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நரசிபுரம் வனப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டி வழக்கம். அதன்படி தோட்டங்களில் சட்டவிரோதமாக விவசாயிகள் நாட்டுவெடிகுண்டுகள் வைத்துள்ளனர். எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சுமார் 55 வயதுடைய காட்டு யானை, நாட்டு வெடிகுண்டை கடித்ததில், அதன் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நாட்களாக காயத்துடன் சுற்றித்திருந்த அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நரசிபுரம் அருகே சுந்தராவயல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை நேற்று முன்தினம் மாலை மயங்கி விழுந்தது.
இதைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சத்துப் பொருட்களான குளுகோஸ், பசுந் தீவனங்கள் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கி நிறுத்த முயற்சி செய்யப்பட்டது.
இதனால், உடல்நலம் தேறிய காட்டு யானை, மெதுவாகக் கால்களை தரையில் ஊன்றி வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றது. மேலும், நோய்வாய்பட்ட யானையை தொடர்ந்து, வனத்துறையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், நரசிபுரம் அருகே வனப்பகுதியில் இந்த யானை பரிதாபமாக இன்று உயிரிழந்தது. இது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.